உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பல்லடத்தில் நாளை மின்தடை

Published On 2022-08-01 08:43 GMT   |   Update On 2022-08-01 08:43 GMT
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
  • பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

பல்லடம் :

பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 2-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், பனப்பாளையம் ஆகிய பகுதிகள் ஆகும். 

Tags:    

Similar News