உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

திருப்பூரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-25 10:11 GMT   |   Update On 2023-08-25 10:11 GMT
  • திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • முடிவில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு., சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பி.பாலன் தலைமை வகித்தார்.

20 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வரும் சாலையோர வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு சிறு தொழில் கடன் அலைக்கழிக்காமல் வங்கிகளில் வழங்க வேண்டும், மதுரை, ஈரோடு மாநகராட்சிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகமே, தள்ளு வண்டி வழங்கியுள்ளது.

அது போல் இங்கும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சாலையோர வியாபாரிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். முடிவில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News