உள்ளூர் செய்திகள்

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

Published On 2022-08-06 06:10 GMT   |   Update On 2022-08-06 06:10 GMT
  • உணவுப் பொருட்களான ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரசார் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம் :

உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் மத்திய அரசை கண்டித்து பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில், பல்லடம் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.வட்டார காங்கிரஸ் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கணேசன்,மாவட்ட துணைத்தலைவர்கள் வெங்கடாசலம், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர செயல் தலைவர் மணிராஜ் வரவேற்றார்.இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோபி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரசார் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,மாவட்ட பொதுச்செயலாளர் நரேஷ் குமார், முருகதாஸ் ,செந்தில்குமார்,சுந்தரிமுருகேசன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News