உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தங்கம் என நினைத்து கவரிங் நகையை திருடி சென்ற கொள்ளையன்

Published On 2022-07-10 05:03 GMT   |   Update On 2022-07-10 05:03 GMT
  • மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
  • லட்சுமி திருப்பூர் சென்று விட்டு இரவு வேலம்பட்டி வந்து அங்கிருந்து ராமம்பாளையத்திற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார்.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ராமம்பாளையத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 53). இவர் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் சென்று விட்டு வேலம்பட்டி வந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து ராமம்பாளையத்திற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அந்த நேரத்தில் பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசில் நடத்திய விசாரணையில் திருடு போனது கவரிங் நகை என்பது தெரிய வந்தது.தொடர்ந்து கொள்ளையனை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News