51-வது ஆண்டு தொடக்க விழா திருப்பூரில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் சபதம் எடுத்துக் கொண்டனர்.
திருப்பூர் :
அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அவைத்தலைவர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைய அனைவரும் சபதம் எடுத்துக் கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ. என்.எஸ்.என். நடராஜன், இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, ஹரிஹரசுதன், கருணாகரன், கே.பி.ஜி. மகேஷ்ராம்,தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், அட்லஸ் லோகநாதன், எஸ்.பி.என். பழனிச்சாமி, ஆண்டவர் பழனிசாமி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.