உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தொழில் தொடங்க ரூ.50கோடி கடன்

Published On 2022-08-08 08:33 GMT   |   Update On 2022-08-08 11:55 GMT
  • தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் திட்ட முகாம் நடந்தது.
  • முகாமில் 50க்கும் அதிகமான சிறு, குறு தொழில் முனைவோர் பங்கேற்றனர்.

திருப்பூர் :

யூனியன் பாங்க் ஆப் இந்தியா சார்பில் திருப்பூர் மண்டல அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு கடன் திட்ட முகாம் நடந்தது.மண்டல மேலாளர் செந்தில்குமார் தலைமையில், பொது மேலாளர், உதவி பொது மேலாளர்கள் பங்கேற்றனர். முகாமில் 50க்கும் அதிகமான சிறு, குறு தொழில் முனைவோர் பங்கேற்றனர்.

மொத்தம் 25 தொழில் முனைவோரின் கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து 50 கோடி ரூபாய் தொழிற்கடன் வழங்க, ஒப்புகை கடிதம் வழங்கப்பட்டது.கடந்த வாரம் நடந்த, பின்னலாடை தொழில்துறையின் சிறப்பு கடன் திட்டத்தில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ஒப்புகை கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News