உள்ளூர் செய்திகள்
குடும்பத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகனுக்கு வலைவீச்சு
- குமரேசன் மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது.
- இதில் ஆத்திரம் அடைந்த ரவி கட்டையால் தந்தையை தாக்கினார்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 55).
இவருடைய மகன் குமரேசன் (35).
ரவி மனைவிக்கும், குமரேசன் மனைவிக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது.
நேற்று இரவு மாமியார் மருமகள் சண்டை மீண்டும் நடந்தது.
அப்போது அங்கு வந்த ரவி, தனது மகனை பார்த்து ஏன் உன் மனைவி திட்டுகிறார் என்று கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ரவி கட்டையால் தந்தையை தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த ரவி மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்குகொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பரவா க்கோ ட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசனை தேடி வருகின்றனர்.