உள்ளூர் செய்திகள்

விபத்து நிகழ்ந்த வீடு      ஷியாம்

ஏ.சி. வெடித்து தூங்கிக் கொண்டிருந்தவர் பலி- சென்னையில் நிகழ்ந்த சோகம்

Published On 2022-08-01 03:00 GMT   |   Update On 2022-08-01 03:20 GMT
  • அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில் புகை வெளி வந்துள்ளது.
  • அந்த அறையை உடைத்து திறந்த தந்தை அதிர்ச்சி அடைந்தார்.

சென்னை திருவிக நகரில் உள்ள குமரன் நகர் காலனியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மகன் ஷியாம் வீட்டில் உள்ள ஒரு அறையில் உறங்கிக் கொண்டிந்தார். அங்கிருந்த ஏ.சி.இயங்கியதால் அந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

இரவு நேரத்தில் அறையில் இருந்து புகை வெளிவந்ததை கண்ட தந்தை பிரபாகர், அதை உடைத்து பார்த்தபோது தீக் காயங்களுடன் மகன் ஷியாம் அலறியதை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், உடனடியாக தண்ணீரை ஊற்றி காப்பாற்ற முயற்சித்துள்ளார். அதற்குள் ஷியாம் படுக்கையில் கருகி நிலையில் உயிரிழந்துள்ளார்.

அந்த அறையில் இயங்கிக் கொண்டிருந்த ஏ.சி.வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஏ.சி.வெடிப்புக்கு மின்கசிவு காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றிரவு நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News