உள்ளூர் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் ஜெயிலில் அடைப்பு

Published On 2022-08-28 08:28 GMT   |   Update On 2022-08-28 08:28 GMT
  • காரிப்பட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி மாயமானார்
  • போலீசார் விசாரணையில் இசிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் சம்பத் (21). என்பவர், திருமண ஆசைக்காட்டி கடத்திச் சென்று, பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி மாயமானார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் இசிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் சம்பத் (21). என்பவர், திருமண ஆசைக்காட்டி கடத்திச் சென்று, பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, சிறுமியை மீட்ட போலீசார், சேலம் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் சம்பத்தை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதுகுறித்து வாழப்பாடி அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News