தமிழ்நாடு செய்திகள்

சசிகலா வீட்டு முன்பு பரபரப்பு போஸ்டர்கள்

Published On 2024-06-16 15:25 IST   |   Update On 2024-06-16 15:25:00 IST
  • சசிகலா போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.
  • 2026 சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியதையடுத்து சசிகலா வெளியிட்ட அறிக்கையில் அ.தி.மு.க. தொண்டர்கள் தளர்ந்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து இன்று மாலை சசிகலா போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார்.

இதனை தொடர்ந்து போயஸ் கார்டனில் அவர் ஆலோசனை நடத்த உள்ள வீட்டு முன்பு அவரது ஆதரவாளர்கள் பரபரப்பான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று சேர்ந்து வென்று காட்டுவோம். சசிகலாவின் இலக்கு 2026 என்கிற வாசகங்களும் போஸ்டர்களில் இடம் பெற்றுள்ளன.

ஒற்றுமை... ஒற்றுமை... ஒற்றுமை... புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே, அம்மாவின் அன்பு தொண்டர்களே சின்னம்மா தலைமையில் ஒன்றிணைந்து 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் வென்று காட்டுவோம் என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சசிகலாவின் அழைப்பை ஏற்று இன்று மாலையில் அவரை எத்தனை பேர் சந்திக்க உள்ளனர்? என்பது இன்று மாலையில் தான் தெரிய வரும்.

Tags:    

Similar News