உள்ளூர் செய்திகள்

உத்தமபாளையம் அருகே போக்சோ வழக்குக்கு பயந்து வாலிபர் தற்கொலை

Published On 2022-09-15 05:49 GMT   |   Update On 2022-09-15 05:49 GMT
  • ஜெயராம் மீது உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் போக்சோ வழக்கு உள்ளது.
  • வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஜெயராம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உத்தமபாளையம்:

உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தை சேர்ந்தவர் ஜெயராம்(29). மாற்றுத்திறனாளியான இவர் மீது உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசில் போக்சோ வழக்கு உள்ளது.

இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சம்பவத்தன்று இதில் ஆஜராக கோர்ட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்த ஜெயராம் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News