உள்ளூர் செய்திகள்

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

Published On 2023-09-20 06:30 GMT   |   Update On 2023-09-20 06:30 GMT
  • மனவேதனை அடைந்த மஞ்சுநாதன் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கே.கே. நகர் அம்பேத்கர் குடியிருப்பை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது40). கட்டிட தொழிலாளி. மதுபழக்கத்துக்கு அடிமையான இவர் தினமும் இரவில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.

இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த மஞ்சுநாதன் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News