உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 தேர்வில் தோல்வி: விஷம் குடித்து மாணவர் தற்கொலை

Published On 2022-06-21 05:25 GMT   |   Update On 2022-06-21 05:25 GMT
  • நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் சுபாஷ் இரு பாடப்பிரிவில் தோல்வியடைந்தாக தெரிகிறது.
  • இதனால் மன உளைச்சலில் இருந்த சுபாஷ் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார். இவரது மகன் சுபாஷ் (வயது 17). இவர் செக்காணூரணி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வு எழுதியிருந்தார்.

நேற்று வெளியான தேர்வு முடிவில் சுபாஷ் இரு பாடப்பிரிவில் தோல்வியடைந்தாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுபாஷ் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து வீட்டின் அருகிலேயே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.

சிறிது நேரத்தில் சுபாஷ் மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தேர்வில் தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருமங்கலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News