உள்ளூர் செய்திகள்

அதிக வட்டி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி: நகைக்கடை உரிமையாளர்கள் 2 பேர் கைது

Published On 2023-06-10 10:22 GMT   |   Update On 2023-06-10 10:22 GMT
  • தலைமறைவாக இருந்த ராபின், ஆல்வின் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
  • நொளம்பூரில் உள்ள நகைக்கடை, வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

சென்னை:

சென்னை நொளம்பூரில் செயல்பட்டு வந்த ஏ.ஆர்.டி. நகைக்கடை சார்பில் அதிக வட்டி தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ரூ.1 லட்சம் பணம் கட்டினால் ஒவ்வொரு வாரமும் ரூ.4 ஆயிரம் வகையில் வட்டி தருவதாக கூறியதை தொடர்ந்து 400-க்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்தனர். இப்படி பொதுமக்களிடம் இருந்து வாங்கிய பணத்துக்கு நகைக்கடை சார்பில் உரிய வட்டி தராமல் ஏமாற்றினர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் கடையின் உரிமையாளர்களான ராபின், ஆல்வின் இருவரும் தலைமறைவானார்கள். இதை தொடர்ந்து இருவருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ராபின், ஆல்வின் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் நொளம்பூரில் உள்ள நகைக்கடை, வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இவர்களுக்கு சொந்தமான வணிக வளாகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News