உள்ளூர் செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

Published On 2023-07-04 09:01 GMT   |   Update On 2023-07-04 09:01 GMT
  • ரெயிலில் வந்த பயணிகள் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.
  • வாலிபர் 8 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகள் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற வாலிபர் 8 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News