உள்ளூர் செய்திகள்
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
- ரெயிலில் வந்த பயணிகள் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.
- வாலிபர் 8 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகள் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற வாலிபர் 8 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.