உள்ளூர் செய்திகள்

ஆலந்தூரில் இ-சேவை மையத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி

Published On 2023-05-22 08:56 GMT   |   Update On 2023-05-22 08:56 GMT
  • ஆலந்தூர் மண்டல அலுவலகம் அருகே உள்ள வணிக வளாகத்தில் அரசு இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
  • அறையில் இளம் பெண் திடீரென தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.அவரை மற்ற ஊழியர்கள் மீட்டனர்.


ஆலந்தூர் மண்டல அலுவலகம் அருகே உள்ள வணிக வளாகத்தில் அரசு இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு 25 வயதுடைய இளம்பெண் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் அங்குள்ள அறையில் இளம் பெண் திடீரென தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.அவரை மற்ற ஊழியர்கள் மீட்டனர்.

இதுகுறித்து பரங்கிமலை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News