உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்களை துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்ட உரம் வழங்கல்

Published On 2022-07-09 10:08 GMT   |   Update On 2022-07-09 10:08 GMT
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்ட ரசாயன உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் உரங்களை எம்.எல்.ஏ, வழங்கினார்.

பூதலூர்:

பூதலூர் அருகே உள்ள மாரநேரி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை தொகுப்பு திட்ட ரசாயன உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் தலைமையில் நடைபெற்றது. பூதலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வரவேற்றார்

நிகழ்ச்சியில் துரைசந்திரசேகரன் எம்.எல்.ஏ, குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு முழு மானியத்தில் உரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பூதலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன், வேளாண்மை துணை இயக்குனர் ஈஸ்வர், மாரநேரி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண்மை அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News