உள்ளூர் செய்திகள்

8 மாத கர்ப்பிணி திடீர் சாவு

Published On 2022-10-19 09:38 GMT   |   Update On 2022-10-19 09:38 GMT
  • சேலம் டவுன் முள்ளுவாடி கேட் மக்கான் தெருவைச் சேர்ந்த கோபிநாத் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
  • நேற்று மதியம் விமலிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி சின்ன திருப்பதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 25). இவரின் தங்கை விமலி (வயது 24).

இவர் சேலம் டவுன் முள்ளுவாடி கேட் மக்கான் தெருவைச் சேர்ந்த கோபிநாத் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் 8 மாத கர்ப்பிணியான விமலி தனது சகோதரர் ஸ்டாலின் வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று மதியம் விமலிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை குமாரசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விமலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 8 மாத கர்ப்பிணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News