உள்ளூர் செய்திகள்

சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் பாராட்டிய போது எடுத்தபடம்.

ஜேடர்பாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு போட்டியில் சாதனை

Published On 2022-08-23 10:04 GMT   |   Update On 2022-08-23 10:04 GMT
  • கோவை மாவட்டம் அவிநாசி தென்னாட்டு மாணவர்புலம் மற்றும் தென்புலம் நூலங்காடி அமைப்பினர் சார்பாக தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகள் பிறந்தநாள் விழா போட்டிகள் நடைபெற்றது.
  • சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் வள்ளிமனோகரன், தீபா, சிவக்குமார் ஆகியோர் பரிசு புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

பரமத்தி வேலூர்:

75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் அவிநாசி தென்னாட்டு மாணவர்புலம் மற்றும் தென்புலம் நூலங்காடி அமைப்பினர் சார்பாக தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகள் பிறந்தநாள் விழா போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

பேச்சு போட்டியில் கலந்து கொண்ட 12-ம் வகுப்பு மாணவிகள் கண்ணகி முதல் பரிசும், பூமதி 2-ம் பரிசும், ஓவிய போட்டியில் 8-ம் வகுப்பு மாணவி தனிகா முதல் பரிசு உட்பட 18 பேரும் பரிசு பெற்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் வள்ளிமனோகரன், தீபா, சிவக்குமார் ஆகியோர் பரிசு புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

பாராட்டு விழாவில் ஆசிரிய,ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News