உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகளை யூனியன் சேர்மன் பாலசிங் வழங்கிய காட்சி.


உடன்குடியில் வரும் முன் காப்போம் சிறப்பு முகாம்

Published On 2022-09-04 09:01 GMT   |   Update On 2022-09-04 09:01 GMT
  • உடன்குடி தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
  • சிறப்பு அழைப்பாளராக உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன்குடி:

உடன்குடி தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் வரும்முன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

வட்டார மருத்துவ ஆலுவலர் ஆனிபிரிமின் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். செட்டியாபத்து ஊராட்சிமன்ற தலைவர் பாலமுருகன், மருத்துவர்கள் ஆர்த்தி பிரசாத், அஸ்வின், பள்ளி தலைமையாசிரியர் லிங்கேஸ்வரன், சுகாதார மேற்பார்வையாளர் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளர்கள் சேதுபதி, குருசாமி, ஆழ்வார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக டெங்கு காய்ச்சல் பரவாத வண்ணம் வீடுகள், தெருக்களில் சுகாதாரப் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு மஸ்தூர், சுகாதாரப் பணியாளர்களிடம் வலியுறுத்தினார்.

முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் பரிசோதிக்கப்பட்டு மருந்துகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது.மத்திய, மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், முதல்-அமைச்சரின் சிறப்பு மருத்துவத் திட்டங்களின் பயன்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தி.மு.க. மாவட்டப் பிரதிநிதி மகேஸ்வரன், தினகர், கிளைச் செயலாளர் மோகன், தனசிங், மற்றும் மருத்துவ, சுகாதார, அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Tags:    

Similar News