உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து கூலித் தொழிலாளி சாவு

Published On 2022-09-24 09:47 GMT   |   Update On 2022-09-24 09:47 GMT
  • வாழை தோட்டத்தில்,வேலை செய்து கொண்டிருந்த போது எதிர் எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று கடித்து விட்டதாக தெரிகிறது.
  • சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பரமத்தி வேலூர்:

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் வடக்கு முத்துராஜா தெருவை சேர்ந்தவர், கணேசன். இவரது மனைவி பானுமதி ( 47) .இவர் மோகனூர் அடுத்த ஒருவந்தூர் புதூரில் ஒரு வாழை தோட்டத்தில்,வேலை செய்து கொண்டிருந்த போது எதிர் எதிர்பாராத விதமாக பாம்பு ஒன்று கடித்து விட்டதாக தெரிகிறது.

அருகில் இருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி பெற்று நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பியுள்ளனர். தொடர்ந்து நாமக்கலில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் ( 27) மோகனூர் போலிசில் கொடுத்த புகாரின் பேரில், மோகனூர் இன்ஸ்பெக்டர் தங்கவேல், மற்றும் சிறப்பு சப்-இ ன்ஸ்பெக்டர், தமிழ ழகன், ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்கள்.

Tags:    

Similar News