உள்ளூர் செய்திகள்
- மாதந்தோறும் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படும்.
- அதன்படி திண்டுக்கல் நகர் பகுதியில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 27-ந்தேதி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.
இதையொட்டி அசோக்நகர், பிள்ளையார் பாளையம், பாண்டியன் நகர், ஆர்த்தி தியேட்டர் ரோடு, பஸ் ஸ்டாண்ட், போடிநாயக்கன்பட்டி, ஸ்பென்சர் காம்பவுண்டு, ஆரோக்கியமாதாதெரு,
மென்டோன்சான் காலனி ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.