உள்ளூர் செய்திகள்
திசையன்விளை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
- 4 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று ஐஸ் கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள விஜய அச்சம் பாட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 24) ஐஸ் வியாபாரி. இவர் அதே ஊரைச் சேர்ந்த 4 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று ஐஸ் கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்மீது வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.