உள்ளூர் செய்திகள்

கலெக்டரிடம் மனு கொடுத்த சமத்துவ மக்கள் கட்சியினர்.

சாத்தான்குளம்- புதுக்குளம் சாலையை ஆய்வு செய்ய வேண்டும்- சமத்துவ மக்கள் கட்சியினர் கலெக்டரிடம் மனு

Published On 2022-06-28 08:10 GMT   |   Update On 2022-06-28 08:10 GMT
  • தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன் தலைமையில் கலெக்டரை சந்தித்து மனுக்கள் கொடுத்தனர்.
  • தரமற்ற தார்சாலை போடப்பட்டதால் அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

சாத்தான்குளம்:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் ஆணைப்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்வது சம்பந்தமாகவும், சாத்தான்குளம்- புதுக்குளம் விலக்கு தரமற்ற தார்சாலை போடப்பட்டதால் அதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தயாளன் தலைமையில் நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனுக்கள் கொடுத்தனர்.

ஒன்றிய செயலாளர்கள், சாத்தான்குளம் ஜான் ராஜா , உடன்குடி அழகேசன், கருங்குளம் முருகேசன் , திருச்செந்தூர் சீமான், ஸ்ரீவைகுண்டம் தேவராஜ் , மாவட்ட மாணவர் அணி செயலாளர் சித்திரவேல், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயந்திக்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் சபரி செல்வம், திருச்செந்தூர் நகர செயலாளர் திருமலைக்குமார் மற்றும் அனைத்து ஒன்றியத்திலுள்ள நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News