உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மளிகை கடையில் ரூ.50 ஆயிரம் திருட்டு
- பாலமுருகன் கடையை திறக்க சென்ற போது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பூபாலராய புரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் கடையை அடைத்து விட்டு சென்றார். நேற்று கடையை திறக்க சென்ற போது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்து ரூ.50 ஆயிரம் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் வடபாகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.