உள்ளூர் செய்திகள்

சேலத்தில் 22 ஆம்னி பஸ்களுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம்

Published On 2022-08-14 09:12 GMT   |   Update On 2022-08-14 09:12 GMT
  • சுதந்திர தின விழா மற்றும் தொடர் விடுமுறையையொட்டி வெளியூர்களில் வசிப்பவர் சொந்த ஊருக்கு திரும்பும் நிலையில் அதை சாதகமாக பயன்படுத்தி, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
  • அதில், 22 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிந்து, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

சேலம்:

சுதந்திர தின விழா மற்றும் தொடர் விடுமுறையையொட்டி வெளியூர்களில் வசிப்பவர் சொந்த ஊருக்கு திரும்பும் நிலையில் அதை சாதகமாக பயன்படுத்தி, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. அதன் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, தொப்பூர் சுங்கச்சாவடிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் குழுவினர் ஆம்னி பஸ்களை நிறுத்தி ேசாதனையில் ஈடுபட்டனர்.

அதில், 22 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிந்து, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.

அத்துடன் 2 பஸ்களில் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் திரும்பவும் பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News