உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

Published On 2022-06-16 10:07 GMT   |   Update On 2022-06-16 10:07 GMT
  • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி.
  • ேபாலீசார் விசாரணை

கலவை:

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த அத்தியா னம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி பானுமதி (வயது 70). இவர் தனியாக வசித்து வந்தார். இவரது மகள் உமா அத்தியாயம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். பானுமதி சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 12 மணி அளவில் உடல் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் வலிதாங்க முடி யாமல் வெளியே ஓடி உள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக் கம்பாறை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமா கலவை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News