உள்ளூர் செய்திகள்
- நகை, பணத்துடன் இளம் பெண் மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள அத்தியூத்து ரமலான் நகரை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகள் சபீனாஸ் பேகம் (வயது21). சம்பவத்தன்று காலை இவர் வழக்கம் போல் டைப்பிங் சென்டருக்கு சென்றவர் பயிற்சி முடித்து மதியம் வீட்டுக்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. வீட்டில் இருந்த 17 பவுன் நகை மற்றும் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.30 ஆயிரத்தை எடுத்து சென்றுள்ளார். இது குறித்து தாயார் மகரியா பீவி தேவிபட்டினம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.