உள்ளூர் செய்திகள்
- இளம்பெண் மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்,
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மகா சக்தி நகரை சேர்ந்தவர் மனோன்மணி இவரது மகள் அபிநயா (வயது 21). சென்னையில் உள்ள பாரதி நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ படித்து விட்டு பெரியபட்டிணம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியில் தற்காலிகமாக வேலைப்பார்த்து வந்தார்.
இந்த நிலையில் அபிநயா மதுரையை சேர்ந்த வாலிபரை காதலித்தாக தெரிகிறது. இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் காரைக்குடிக்கு செல்வதாக கூறி சென்ற அபிநயா பின்னர் வீடு திரும்பவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது பேச மறுப்பதாலும், பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் கேணிக்கரை போலீசில் தாய் மனோன்மணி புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.