உள்ளூர் செய்திகள்

காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. நிதி உதவி

Published On 2022-07-05 08:04 GMT   |   Update On 2022-07-05 08:04 GMT
  • கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கினார்.
  • 2 மீனவர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ. தனது நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரைச் சேர்ந்த பெரியசாமி. இவா்களது மகன்கள் முனியசாமி (30), அருண்குமாா் (24), காசிசுமன் (20) மலைச்செல்வம் (18). இவர்களுக்கு சொந்தமான நாட்டுப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது பலத்த காற்றில் படகு கவிழ்ந்து முனியசாமி, மலைச்செல்வன் ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

மீனவர் முனியசாமிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தகவல் அறிந்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க, பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினரை அவர்களது வீட்டுக்கு சென்று முனியசாமியின் மனைவி சவுபாக்கியம், மலை செல்வத்தின் தாயார் வேளாங்கண்ணியை சந்தித்து ஆறுதல் கூறினார். 2 மீனவர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ. தனது நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

மீனவர்களுக்கு வழங்கப்படும் அரசு நிதி உதவியும், முனியசாமி மனைவிக்கு அரசு வேலையும் வாங்கி தருவதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். கீழக்கரை நகர் மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான், தி.மு.க மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், தி.மு.க மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News