உள்ளூர் செய்திகள்

மீன்பிடி திருவிழா

2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழா

Published On 2022-07-11 07:54 GMT   |   Update On 2022-07-11 07:54 GMT
  • முதுகுளத்தூர் அருகே 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழா நடந்தது.
  • ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்தனர்.

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தில் உள்ள ஊரணியில் மீன்பிடி திருவிழா நடந்தது.

2 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த மீன்பிடி திருவிழாவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்தனர்.

மீன்வலைகள், கச்சாவலைகள் கொசுவலைகள் ஆகியவற்றை கொண்டு கெண்டை, அயிரை, கெளுத்தி, விரால், குரவை மீன்களை பிடித்தனர்.

ஏராளமான மீன்கள் பிடிபட்டதால் அவற்றை வாளிகளில் அள்ளிச் சென்றனர். இதன் காரணமாக கீழத்தூவல் கிராமத்தில் அனைவரது வீடுகளிலும் மீன் குழம்பு வாசனை கம, கமத்தது.

Tags:    

Similar News