உள்ளூர் செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
- கவிதைக்குடி கிராமத்தில் ஆய்வு செய்த கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், ஒரு மூதாட்டியிடம் குறைகளை கேட்டார்.
- அப்போது பரமக்குடி வட்டாட்சியர் தமீம்ராஜா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சுதர்ஷன் உள்பட பலர் உடனிருந்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம்எட்டிவயல் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டினையும் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் போகலூர் ஊராட்சி மயானத்தையும், சத்திரக்குடி கிராம சந்தையில் உள்ளகழிப்பறை மற்றும் வளாகத்தையும்,சத்திரக்குடி ஊராட்சி தீயனூர் கிராமத்தில் பிரதம மந்திரி கிராமச் சாலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய தார் சாலையையும், கவிதைக்குடி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்.ஓ.பிளான்ட் மூலம் வழங்கப்படும் குடிதண்ணீரின் தரம் குறித்தும் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பரமக்குடி வட்டாட்சியர் தமீம்ராஜா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சுதர்ஷன் உள்பட பலர் உடனிருந்தனர்.