உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் உலக அமைதிக்கான பேரணி

Published On 2023-06-26 09:27 GMT   |   Update On 2023-06-26 09:27 GMT
  • இயற்கை வளத்தை காப்பாற்ற வேண்டியும் உலக அமைதிக்கான பேரணி நடந்தது.
  • ஊர்வலத்தில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரவேணு,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உலக நன்மை வேண்டியும், அமைதியான சூழ்நிலை உருவாக வேண்டியும், இயற்கை வளத்தை காப்பாற்ற வேண்டியும் உலக அமைதிக்கான பேரணி நடந்தது. இதில் கிறிஸ்துவ பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் , பாதிரியார்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு பாதிரியார் அமிர்தராஜ் தலைமை தாங்கினார். புனித அந்தோணியார் பள்ளி தலைமை ஆசிரியர் மோட்சா மேரி, ஹோம் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர் மவுலிமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியானது காமராஜ் பகுதியில் தொடங்கி கோத்தகிரி முக்கிய சாலைகள் வழியாக மார்க்கெட், பஸ் நிலையம் வந்தடைந்தது. அதனை தொடர்ந்து ஒரு மணி நேரம் அமைதியாக நின்றனர். இந்த ஊர்வலத்தில் புனித அந்தோணியார் பள்ளி, ஹோம் மெட்ரிக் பள்ளி அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News