உள்ளூர் செய்திகள்
டெல்லி கூட்டத்தில் ராகுல் உரை புத்துணர்வை அளித்தது- விஜய் வசந்த் எம்.பி.
- அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டு என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
- ராகுல் எழுச்சிமிகு உரையாற்றியதாக விஜய் வசந்த் எம்.பி. தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர்களிடையே ராகுல் காந்தி எம்பி உரையாற்றினார். அப்போது தன் மீதான அமலாக்கத்துறை விசாரணை மற்றும் அக்னிபாத் திட்டம் குறித்தும் பேசினார். அப்போது, அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டு என வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்றது குறித்து விஜய் வசந்த் எம்.பி. தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இன்று டில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஒரு எழுச்சிமிகு உரையை ஆற்றினார்கள். நமது நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நம்பிக்கையூட்டும் இந்த உரை ஒரு புத்துணர்வை அளித்தது" என விஜய் வசந்த் கூறி உள்ளார்.