உள்ளூர் செய்திகள்
பொன்னமராவதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- தொழிலாளர்களின் குறைகளுக்கும், ஓய்வு பெற்றவர்கள் கோரிக்கைக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும்
- பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தங்கமணி தலைமை வகித்தார்.
புதுக்கோட்டை:
ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவங்கி நடத்தி முடிக்க வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளியை வெறும் கையோடு அனுப்பக் கூடாது,
தொழிலாளர்களின் குறைகளுக்கும், ஓய்வு பெற்றவர்கள் கோரிக்கைக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும் என கேட்டு பொன்னமராவதியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மற்றும் சிஐடியு பொன்னமராவதி கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தங்கமணி தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் சிவஞானம், ராஜேந்திரன், சின்னச்சாமி, மனோகரன், வீரய்யா,சிஐடியு கிளை செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.