உள்ளூர் செய்திகள்

முக்கூடலில் மூதாட்டி தற்கொலை

Published On 2022-07-19 09:09 GMT   |   Update On 2022-07-19 09:09 GMT
  • கடந்த சில நாட்களாக வியாகம்மாளின் மகன்களும், மகள்களும் அவரிடம் சொத்து பிரித்து தருமாறு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
  • முக்கூடல் போலீசார் மூதாட்டி உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நெல்லை:

முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை வடக்கு தெருவை சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மனைவி வியாகம்மாள்(வயது 80).

இவர்களுக்கு 6 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வியாகம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த முக்கூடல் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களாக வியாகம்மாளின் மகன்களும், மகள்களும் அவரிடம் சொத்து பிரித்து தருமாறு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதில் மனம் உடைந்த வியாகம்மாள் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News