உள்ளூர் செய்திகள்
- சேலம் செவ்வாய்ப் பேட்ைட காஸ்வே ரோடு குகை பகுதியில் முதியவர் மாயமானார்.
- அவரது மனைவி மகாலட்சுமி பல்வேறு அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
சேலம்:
சேலம் செவ்வாய்ப் பேட்ைட காஸ்வே ரோடு குகை பகுதியை சேர்ந்தவர் ெஜகநாதன், (வயது 61). இவர் கடந்த 15-ந்தேதி காலை 7 மணிக்கு வெளியே வேலை தேடி செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றார். அதன் பிறகு வீட்டில் வரவில்லை.
அவரது மனைவி மகாலட்சுமி பல்வேறு அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கணவர் இதுவரை வீடு திரும்பாததால் மகாலட்சுமி செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான ெஜகநாதனை தேடி வருகின்றனர்.