உள்ளூர் செய்திகள்

மூலக்கரைப்பட்டியில் சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பலி

Published On 2022-07-23 09:34 GMT   |   Update On 2022-07-23 09:34 GMT
  • நேற்று இரவு நடந்த விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துள்ளார்.
  • மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற நபரை தேடி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மீரான் மைதீன்(வயது 80). இவர் நேற்று இரவு அந்த பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மீரான் மைதீன் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மீரான் மைதீன் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News