உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் பேசிய போது எடுத்த படம். 

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

Published On 2023-10-05 09:08 GMT   |   Update On 2023-10-05 09:08 GMT
  • தி.மு.க. செயற்குழு கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
  • கூட்டத்தில் நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் வசந்தம் ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

நெல்லை:

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள மத்திய மாவட்ட அலுவலகத்தில் நடை பெற்றது.

மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் தலைமை தாங்கினார். நெல்லை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளருமான வசந்தம் ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பாராளுமன்ற தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும், பூத் கமிட்டி அமைக்கும் பணி களை செய்ய வேண்டும், வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளி லும் வெற்றி பெற தீவிரமாக உழைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கி பேசினார்.

கூட்டத்தில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அன்டன் செல்லத்துரை, மாநில மகளிர் தொண்டரணி அமைப்பாளர் விஜிலா சத்தியானந்த், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டை யப்பன், மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வின்சென்ட் மணிதுரை, துணை அமைப்பாளர் மீரான் மைதீன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயா, கவுன்சிலர்கள் நித்ய பாலையா, சுந்தர், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பா ளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீரபாண்டி யன், மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுக ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News