உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே கஞ்சா விற்றவர் கைது

Published On 2022-07-12 08:31 GMT   |   Update On 2022-07-12 08:31 GMT
  • திருவெண்ணைநல்லூர் அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த பச்சை மகன் கோவிந்தன் (வயது 61). இவர் வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் கோவிந்தனை கைது செய்தனர். அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News