search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sale of ganja"

    • போலீசார் சந்தேகபடும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
    • 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி ஏரிக்கரை அருகே செல்லியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேக படும்படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த பச்சைமுத்து மகன் ஆதிகேசவன் (வயது 22) என்பதும் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த உதயசூரியன் தப்பி ஓடியதும் தெரிய வந்தது. இதுகுறித்து ஆதி கேசவன் மற்றும் உதயசூரியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஆதிகேசவனை கைது செய்தனர். அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். ஆதிகேசவன் மீது கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தலைவாசல் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தப்பி ஓடிய உதயசூரியனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கருணாகரனை கையும் களவுமாக பிடித்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கழிக்குப்பம் கிராமத்தில் மேட்டு தெருவில் வசிப்பவர் கருணாகரன் (வயது 48). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் மற்றும் போலீசார் கழிகுப்பத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கருணாகரனை கையும் களவுமாக பிடித்தனர்.

    கருணாகரனிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இன்ஸ்பெக்டர் பாபு கூறுகையில், தடைசெய்யப்பட்ட கஞ்சா, சாராயம் போன்றவற்றை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
    • 100 கிராம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்ன தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது ெரயில் நிலையம் பஸ் நிறுத்தம் அருகே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசா ரணை மேற்கொண்டனர். அதில் வந்த 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர். இதனை அடுத்து அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் சுமார் 100 கிராம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர்கள் குறிஞ்சிப்பாடி சுப்புராயர் கோவில் பகுதியைச் சார்ந்த ராஜா, சக்கரவர்த்தி மற்றும் வாசுதேவன் என தெரிய வந்தது.

    இதையடுத்து தொடர்ந்து நடந்த சோதனையில் அலமேலு நகர் பகுதியில் பாலாஜி என்பவரது வீட்டிற்கு அருகே சந்தேகப்ப டும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்ய போலீசார் சென்றனர். அப்போது 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். மற்ற 2 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் பாட்டை வீதியை சார்ந்த பாலமுருகன், அம்பேத்கர் நகரைச் ேசர்ந்த ஆல்பர்ட் எட்வின் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 110 கிராம் கஞ்சா, 11 ஆயிரத்து நூறு ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்ற ப்பட்டன. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • மேட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன் மேட்டூர் அடுத்த மாசிலாபாளையம் அருகே ரோந்து சென்று கொண்டி ருந்தார்.
    • மாசிலாபாளையம் வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தார்.

    மேட்டூர்:

    மேட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மேட்டூர் அடுத்த மாசிலாபாளையம் அருகே ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மாசிலாபாளையம் வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தார்.

    அதை தொடர்ந்து இரு வரையும் மேட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் ஒருவர் மேட்டூர் கீழ் குள்ள வீரன்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கவுதம் (வயது 30). மற்றொ ருவர் வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகத்தின் மகன் சீனிவாசன் (25) என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த சப்-இன்ஸ்பெக்டர் ரவிச் சந்திரன் இருவரையும் கைது செய்தார்.

    • சிலர் வீடுகளில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக புதுப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த திருவாமூர், எலந்த ம்பட்டுஆகிய கிராமங்களில் சிலர் வீடுகளில்கஞ்சாவை பதுக்கி வைத்துவி ற்பனைசெய்துவருவதாக புதுப்பேட்டை போலீசாரு க்குரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமா ர்தலைமையி ல்போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அப்போது திருவாமூரில் உள்ள ஒரு வீட்டில் வெங்கடேசன் மகன் சிவக்குமார்(20),பெரியஎலந்தப்பட்டு ராஜேந்திர ன்மகன்ராகுல்(22)ஆகியோர் 85கிராம்கஞ்சா வைத்திருந்து விற்பனை செய்தது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் இதேபோல முத்தாண்டி குப்பம் போலீசார் நடத்திய தீவிர கஞ்ச வேட்டையில்கீ ழக்குப்பம்வடக்கு தெரு குமார் மகன் தங்கப்பா ண்டியன் (20)கீழகுப்பம் பகுதியில் கள்ளத்தனமாக கஞ்சா மற்றும் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அவரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

    • ராஜாராமன் தலைமையிலான போலீசார் வீ. கூட்ரோடு பகுதிகளில் சோதனை மேற்கொ ண்டனர்.
    • குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலை யத்திற்கு உட்பட்ட வீ.கூட்ரோடு பகுதிகளில் கஞ்சா விற்ப தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் வீ. கூட்ரோடு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீ. கூட்டு ரோட்டில் இருந்து சின்னசேலம் செல்லும் சர்வீஸ் சாலையில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் சின்னசேலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா பெரியேரி கிராமத்தைச் சேர்ந்த அன்பு ரோஸ் (வயது 25), வேல்முருகன் மகன் நவீன் ராஜ் (18) என்பதும் தெரியவந்தது.

    பின்னர் அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, கடலூர் சிறையில் அடைத்தனர். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • விழுப்புரத்தில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் ஆசாகுளம் பகுதிகளில் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட2வாலிபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். விழுப்புரம் ஆசாகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டி.எஸ். பி.பார்த்திபன் மேற்பார்வை யில்தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் ஆசாகுளம் பகுதிகளில் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    ஆசாகுளம் குடிசை பகுதி அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த 2 பேரை போலீஸ் நிலையம்அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர்கள் ஆசாகுளம் செந்தில் குமார் மகன் ஞானவேல் (19), விழுப்புரம் சித்தேரிக்கரை பாலு மகன் ஸ்ரீதர் (20) என்பது தெரிய வந்தது. அவர்கள் 350கிராம் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை க்காக வைத்திருந்ததை பறிமுதல் செய்துவழக்கு பதிவு செய்து 2 பேைர கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • திண்டிவனம் டி.எஸ்.பி அலுவலகம் அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்டம் பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டி.எஸ்.பி அலுவலகம் அருகே உள்ள கர்ணாவூர் பாட்டை ரோடு, சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் டி.எஸ்.பி அலுவலகம் எதிர் வீட்டில் வசிக்கும் ஆனஸ்ட் ராஜ் (வயது 21) என தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பண்ருட்டியில் கஞ்சா விற்ற வாலிபர்கைது .
    • அவரை கைது செய்து சிறையில் அடைத்தநர்,

    கடலூர்:

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்நந்தகுமார்,சப்இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேற்று தீவிரகஞ்சா வேட்டையில்ஈடுபட்டுஇருந்தனர்.அப்போதுபண்ருட்டி அடுத்த சிறுகிராமம்கிழக்குத் தெரு தாமஸ் (24) கஞ்சாவிற்பனையில் ஈடுபட்டதுதெரியவந்தது இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான கஞ்சாபொட்டலங்களை பறிமுதல் செய்து அவரைபண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • எலவனாசர் கோட்டை பகுதிக்குட்பட்டஆசனூர் ரோடு ஓரத்தில் மோசின் (27) என்பவரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்ட பகுதிகளில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது களமருதூர் பகுதி ஒரத்தூர் காலனி சேர்ந்தவர் தினேஷ் (வயது 18). கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை மடக்கி பிடித்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதே போல் எலவனாசர் கோட்டை பகுதிக்குட்பட்டஆசனூர் ரோடு ஓரத்தில் மோசின் (27) என்பவரும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    போலீசார் பார்த்தவுடன் அவர் ஓடத் தொடங்கினார். ஆனால், போலீசார் அவரை சிறிது தூரம் துரத்திச் சென்று மடக்கி பிடித்து கைது செய்து அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தையும், பறிமுதல் செய்து கொண்டு வந்து உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். இதுபோல் தொடர்ந்து சம்பவங்களை ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உளுந்தூர்பேட்டை டிஎஸ்.பி. மகேஷ் எச்சரித்துள்ளார்.

    • எலவனாசூர்கோட்டை பகுதியில் போலீசார்தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • எஸ். மலையனூர் கிராமத்தில் சுபாஷ் என்பவர் தெருவில் கஞ்சா விற்றார்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. மகேஷ் மேற்பார்வையில் தமிழ்வாணன் இன்ஸ்பெக்டர் தலைமையில் உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை பகுதியில் போலீசார்தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ். மலையனூர் கிராமத்தில் சுபாஷ் என்பவர் தெருவில் கஞ்சா விற்றார். உடேன போலீசார் அவரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

    • பண்ருட்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் நேற்று தீவிரகஞ்சா வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ)நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரண்யா, புஷ்பராஜ், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் நேற்று தீவிரகஞ்சா வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பண்ருட்டி அடுத்த ராஜாப்பாளையம் பகுதியில் மளிகைமேடு கிழக்குத் தெருவை சேர்ந்த சந்தோஷ் (வயது 23) என்பவர் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து அவரை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×