search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர் கைது
    X

    கள்ளக்குறிச்சி அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர் கைது

    • ராஜாராமன் தலைமையிலான போலீசார் வீ. கூட்ரோடு பகுதிகளில் சோதனை மேற்கொ ண்டனர்.
    • குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலை யத்திற்கு உட்பட்ட வீ.கூட்ரோடு பகுதிகளில் கஞ்சா விற்ப தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையிலான போலீசார் வீ. கூட்ரோடு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீ. கூட்டு ரோட்டில் இருந்து சின்னசேலம் செல்லும் சர்வீஸ் சாலையில் கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் சின்னசேலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுகா பெரியேரி கிராமத்தைச் சேர்ந்த அன்பு ரோஸ் (வயது 25), வேல்முருகன் மகன் நவீன் ராஜ் (18) என்பதும் தெரியவந்தது.

    பின்னர் அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, கடலூர் சிறையில் அடைத்தனர். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×