உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
- நள்ளிரவில் மர்ம நபர் மோட்டார் சைக்கிளையும், வீட்டில் இருந்த செல்போன்களையும் திருடி சென்று விட்டார்.
- திருட்டு குறித்து திருக்குறுங்குடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
களக்காடு:
திருக்குறுங்குடி நம்பிதோப்பை சேர்ந்தவர் ராஜ் (வயது 38). சம்பவத்தன்று இரவில் இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் மோட்டார் சைக்கிளை யும், வீட்டில் இருந்த செல்போன்களையும் திருடி சென்று விட்டார். இதுபற்றி ராஜ் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார்.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கடையத்தை சேர்ந்த மகேஷ் (19) என்பவர் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன்களை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து மகேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.