உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் பாய்ந்து விபத்து; ஒருவர் பலி

Published On 2022-10-07 08:06 GMT   |   Update On 2022-10-07 08:06 GMT
  • பாவூர்சத்திரம் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசைராஜா, பஜனைமட தெருவைச் சேர்ந்த முருகேஷ்
  • இரவு பாவூர்சத்திரத்தில் உள்ள அவர்களது நண்பர்களை பார்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசைராஜா ( வயது 23).

இவர் அதே ஊரில் உள்ள பஜனைமட தெருவைச் சேர்ந்த முருகேஷ் (19) என்பவருடன் நேற்று இரவு பாவூர்சத்திரத்தில் உள்ள அவர்களது நண்பர்களை பார்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

மேலப்பாவூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலை யோரம் இருந்த பள்ளத்தில் அவர்களது மோட்டார் சைக்கிள் பாய்ந்தது.

இந்த விபத்தில் இசை ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த முருகேஷ்சை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் சேர்க்க ப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News