உள்ளூர் செய்திகள்
திருவெண்ணைநல்லூர் அருகே கஞ்சா விற்ற நபர் கைது
- திருவெண்ணைநல்லூர் அருகே சித்தானங்கூர் பஸ் நிறுத்தம் அருகில் கஞ்சா விற்பதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 12 கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே சித்தானங்கூர் பஸ் நிறுத்தம் அருகில் கஞ்சா விற்பதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரித்த போது அவரிடம் இருந்து 12 கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் திருவெண்ணைநல்லூர் அருகே காந்தளவாடி பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ் (வயது 20) என்பது தெரிவந்தது. மேலும் போலீசார் கைது செய்து சரண்ராஜ் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.