உள்ளூர் செய்திகள்
- குலமங்கலம் கிராமத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
- குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்து தீர்வு பெற்று கொள்ளலாம்.
மதுரை
மதுரை வடக்கு வட்டம், குலமங்கலம் பீடர்-1 கிராமத்தில் நாளை (15-ந் தேதி) காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் குலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள நாடக அரங்கில் நடைபெற உள்ளது.
இதில் மதுரை வடக்கு வட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் கலந்து கொண்டு கலெக்டரிடம் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்து தீர்வு பெற்று கொள்ளலாம்.