உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற மூதாட்டி-வாலிபர் கைது

Published On 2022-09-19 08:06 GMT   |   Update On 2022-09-19 08:06 GMT
  • மதுரை அருகே கஞ்சா விற்ற மூதாட்டி-வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
  • 90 கிராம், 1.300 கிலோ கஞ்சாவுடன் அவர்கள் பிடிபட்டனர்.

மதுரை

மதுரை-அருப்புக்கோட்டை மெயின் ரோடு, சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் மூதாட்டி கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. அவர்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது டீக்கடை பின்புறம் மூதாட்டி, 90 கிராம் கஞ்சாவுடன் பிடிபட்டார். அவரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர் பச்சைமால் மனைவி மூக்கம்மாள் (வயது 75) என்பது தெரிய வந்தது. அவரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கைது செய்தனர்.

தத்தனேரி சுடுகாட்டு காளியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக செல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர்.

அங்கு 1.300 கிலோ கஞ்சாவுடன் செல்லூர் ஜீவா நகர், தங்கமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாம்புகட்டை கணேசன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News