உள்ளூர் செய்திகள்

கைதான கார்த்திக்

வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம்

Published On 2022-07-26 09:24 GMT   |   Update On 2022-07-26 09:24 GMT
  • வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டார்.
  • பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

மதுரை

மதுரை வண்டியூர் மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). இவர் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு அண்ணாநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த உறவுக்கார பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதில் தொடர்பு உடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சூரக்குமார் ஆலோசனை பேரில், அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் கார்த்திக்கிடமும் விசாரணை நடத்தி மருத்துவ பரிசோதனை செய்தபோது பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News