உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் டிரைவருக்கு அடி

Published On 2022-06-22 08:23 GMT   |   Update On 2022-06-22 08:23 GMT
  • அரசு பஸ் டிரைவரை தாக்கியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  • பஸ் முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் கற்பக நகர் சேர்ந்தவர் ரமேஷ் (48).

இவர் திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில் அரசு பஸ் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கப்படை கிராமத்திற்கு அரசு பஸ்சை ஓட்டிவந்தார்.

அப்போது பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் திரும்பும்போது செங்கப்படையை சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் அன்புச்செல்வன்(25) பஸ் முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அன்புச்செல்வன் தன்னை தாக்கியதாக டிரைவர் ரமேஷ் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் அன்புச்செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News