உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள்.

அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-07-12 08:41 GMT   |   Update On 2022-07-12 08:41 GMT
  • அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • ஊர் மக்கள் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.

திருமங்கலம்

திருமங்கலம் அருகே உள்ள வடகரை கிராமத்தில் முத்தையா, அய்யனார் சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இந்த கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 2 நாட்களாக சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது.

அருப்புக்கோட்டை பட்டர் பரந்தாமன் குருக்கள் தலைமையில் வேத விற்பனர்கள் தீப, தூப ஆராதனை நடத்தினர்.

பெரிய பூசாரி செல்வராஜ், டாக்டர் அய்யம்பெருமாள் ஜெயபிரகாஷ்,குமார், ராஜாமணி. முத்துக்குமார். உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊர் மக்கள் சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

Similar News